Wednesday, September 30, 2009

Monday, September 28, 2009

முரண்




காதை பிடித்து
தூக்கினாலோ ,
கழுத்தை பிடித்து
திருகினாலோ ,
அது குழந்தையென
தெரிந்து ,
அமைதி காக்கிறது
குட்டி பூனையோ,
நாயோ !!!

சற்று முன்
கண்ணயர்ந்த
அன்னையோ ,
சற்றே தள்ளிவிட்டு ,
ஏதோ முணுமுணுக்கிறாள் !!

ஏதும் புரியாமல்
மெதுவாக
அழத் தொடங்குகிறது
அச்சிறு குழந்தை !!

Wednesday, September 16, 2009

நேரம் !!





4:55 PM
Sydney Australia


கணவனுக்கு
கையசைத்து ,
இரண்டாம்
பிரசவத்துக்கு
விமானம்
ஏறுகிறாள் ...


2:55 AM
Cincinnati. Ohio


டாலர்கள் துரத்தி
மறந்து போய்,
உறங்கி போன
தன் செல்ல மகளுக்கு
நெற்றியில் முத்தமிட்டு
கண் அயர்கிறான் ...


12:25 PM
பழைய புத்தக கடை சென்னை



ரமணி சந்திரனின்
பழுப்பேறிய
பழைய நாவலின்
கடைசி பக்கத்தில்
என்றோ சேர்த்தெழுதிய
இவள் இவன் பெயரின்
கடைசி எழுத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
கரையான் !!

Friday, September 11, 2009

Tuesday, September 8, 2009

பசலை காண் !!




பகை வென்று
வாகை சூடிவரும்
என் கணவ ..

நெற்றி பிரிந்து
மேனி படர்ந்த
பசலை காண்!!