Friday, January 15, 2010

என் பார்வையில் ஆயிரத்தில் ஒருவன் ...






இன்னும் சிறிது நாட்களில் "நம்ம ஊரு Apocalypto ", "தமிழில் ஒரு Lord of The Rings ", "அவதார் படத்தின் தழுவல்" என்பன போன்ற விமர்சனங்கள் எழலாம் ...

கிபி 1200 களின் போரின் போது தப்பிச் சென்று , வியேட்நாம் தீவில் ஒளிந்த சோழ மன்னனின் வாரிசை தேடி போகிறாள் பாண்டிய வம்சா வழியில் வந்த இக்கால பெண்ணொருத்தி... இது தான் படத்தின் Single Line... என்? எதற்கு? எப்படி? .... விடைகளை வெள்ளித்திரையில் காண்க ....

The so called Hero Karthi is still wearing the same 'Paruthiveeran' underwear. Gestures,Dialougues, fights and reactions says it all. He is still n hang over. Man!! Its almost 3 years n u gotta come outa this. Waiting for Paiyya!!..

Wat "Nayan" was to Simbu's vallavan "Andrea" isto Selva's Aayirathil Oruvan..Someone made good use of her...The rest is left to readers' imagination..

Azhagam Perumaal is not impressive ..கத்திக்கொண்டே இருக்கிறார் ...Art direction கூட ..ஒரு காட்சியில் எதையோ பார்த்து விட்டு உணர்ச்சி மிகுதியில் ரீமா ஆண்ட்ரியாவை கட்டி முத்தமிடுகிறார் .என்னவென்று பார்த்தால் அடுத்து ஒரு மொக்கையான Table Shot...How bot CG??? Sucks .. Bigtime...


GV prakash is good but coudnt manage the daunting task. Many a times the BGM goes blank. Cant help.. Im missing yuvan ...!!


யாழ் மீட்டி, லிங்க தரிசனம் தரும் கருந்தோள் கொண்ட சோழனாக பார்த்திபன்... He was good but at times he sounds lik a Leader of Cannibals. Thank God !.. Selva rejected Dhanush for this role. He woudnt have done justice!


படம் முழுக்க வியாப்பித்து இருப்பது ரீமா சென் ...Life time role for her .Cant get better, She has done it graciously . She fires, hiphops, fights , boozes and what not...
ஆனாலும் Lip Sync ல் சொதப்புகிறார் ... சில இடங்களில் சகிக்க முடியவில்லை ...

" You Bitch ! I will get your F*&kin brain out of here" , She yells sometime as Anita Pandian ...Jus minutes later " கலம்பகம் ,காப்பு , உலா... ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் " எனப் பாடும் பாண்டிய இளவரசியாய் ரசிகர்கள் மனதில்சம்மனமிட்டு உட்காருகிறார் ...For her these 2 yrs may be a kind of investment .. But for Karthi??


The next few lines may make you laugh, may be. I am an ardent fan of Reems right from Minnale. Ive never missed the first show. Never mind if dat was a Vallavan ,Rendu, Thimiru. Watsoeva..I loved her. Friends used to mock at me. Even my slam book reads "Reema's fan!! Wierd taste !!.. He neva likes cute gals but stout,boo......" But Ive always believed her best is yet to come ..And here it is ..

சோழ நாட்டு குலப்பெண் ஒருத்தி தன் பால் சுரக்காத மார்பழுத்தி ,மன்னனுக்கு பசியின் வலி உணர்த்துகிறாள் ... இதுமட்டுமின்றி படம் முழுக்க குடும்பத்தோடு வந்தவர்களை நெளியச் செய்கிற 'தேவையில்லாத' காட்சிகள் நிறைய.. இவை ஏதுமின்றி செல்வராகவனால் படம் எடுக்க முடியாது என்றே தோன்றுகிறது ....

சோழ காலமாகட்டும், பிரஞ்சு புரட்சி, பாகிஸ்தான் பிரிவினை , இலங்கை பிரச்சனை..
எதுவாகட்டும் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கையே அதிகம் என்கிறது வரலாறு... சோழ பெண்ணை குத்தாட்டம் ஆடச் சொல்லும் காட்சி கூட ஒன்றுண்டு ...சக மனிதனை வசைவதர்க்கு கூட பெண்ணின் பிறப்புறுப்புகள் தேவைபடுகின்ற உலகில் , செல்வராகவனை சொல்லி குற்றமில்லை ...

கடல்கோள் அள்ளிய இலெமூரியா கண்டத்துக்கு போய் வந்த உணர்வு... யார் கண்டார் ? சோழ ஜீனின் எச்ச மிச்சம் கூட இன்னும் இருக்கலாம் .. தியேட்டரில் அடுத்த சீட்டில் மக்கள் சாவதை கை கட்டி வெறிக்கும் அவர் சோழன் வழி வந்தவராய் இருக்காம் .. முன் சீட்டில் சலனபடாமல் பார்ப்பவள் பாண்டிய
வம்சாவழியாய் இருக்கலாம் ... மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் வேறு மாதிரியான படம் ...Unlike his previous attempts , A 'Complete' film from Selvaraghavan.

பீட்சாவுக்கும், KFC க்கும் பழகி போய், நுனி நாக்கு ஆங்கிலம் கேட்கும் தமிழ்நாட்டில்,
தமிழே தற்குறியாய், ஆங்கிலமும் அரைகுறையாய் ... தமிழ்ப்பாசம் ஒட்டியிருக்கும் எனை போன்ற சிலருக்கே இப்படம் பிடிக்கும் ..."கற்றது தமிழை" தோல்வியுறச் செய்த தமிழன் இங்கும் தொடர்வான்... தயாரிப்பாளர் பாவம்...

யுவனையும், பாடல் வரிகளையும் கற்றது தமிழிடம் இழந்து விட்டான் இவ்வொருவன் என்றே சொல்ல வேண்டும்... சாட்சியாக சில வரிகள்

எனக்கென புது பூமி வேண்டுமே!
தமிழ் தான் அங்கே வேண்டுமே!
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே!
எச்சில் இதயம் மாறவேண்டுமே!

அடடா இது நடக்குமா?
என் பூமி எனக்கு கிடைக்குமா? ஓ!
அது வரை நெஞ்சம் பொறுக்குமா?
என் தொன்மத்தமிழினம் பிழைக்குமா? ஓ?

அகம் புறம் என இரண்டு பிரிவிலே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்,

அடுத்தவர் தமை சீண்டி பார்க்கையில்

எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குணம்!


தமிழ் மேல் , தமிழ் இலக்கண, இலக்கியங்கள் , வரலாற்றின் மேல் காதல் கொண்டவர்கள் மட்டும் தியேட்டர் செல்லவும்... மற்றவர்கள் எப்போதும் போல !!!

Thursday, December 31, 2009

நெடுநாளைய ஏக்கம் !!






நிலா மழையில்
நனைந்த உன்னை
முதன் முதலாய்
பார்த்த போது

சட்டென
தீர்ந்தது...

மகேந்திர வர்மனின்
சிற்பமொன்றை
பௌர்ணமியில்
பார்க்கும்
நெடுநாளைய
ஏக்கமொன்று !!


Flickr Link

Sunday, December 27, 2009

பெயர்கள் ..





ஊருக்கு வெளியே
வறட்டு சப்பாதிகள்ளிகள் ...

என் முதல் சம்பளத்தின்
அனைத்து ரூபாய்தாள்கள்...

பழைய வாய்பாட்டின்
கடைசி பக்கம் ...

சுனை சுரக்கும்
அந்த மலைப்பாறை...

தூசி படர்ந்த நம்
வகுப்பறை மேஜை ...

பனியில் குளித்த
நிலை கண்ணாடி ...

பாசி படிந்த
பாழும்கிணற்று படிகள்...

மூடியிட்டு
கடலில் வீசியெறிந்த
கண்ணாடி புட்டி ...

சட்டென இவையாவும்
நினைவுக்கு வந்து போயின ,

திருமண அழைப்பிதழில்
உன் பெயருடன்
யார் பெயரையோ,
பார்த்த பிறகு !!

நேற்றைய கனவில்...





நேற்றைய கனவில்
சற்றே தள்ளி
நட்பாய் நீயும்,
காதலாய் நானும்..

அடர்ந்த காட்டின்
நிசப்தத்தினூடே ,
ஓர் ஒற்றையடி
பாதையில்
இருவருக்குமான
இடைவெளி காற்று
தான் காமம்
என்றது...

தெரிந்தோ,
தெரியாமலோ,
உரசிக் கொள்கின்றன
நம் கைவிரல்கள்....

Saturday, December 26, 2009

கருகும் ரோஜா...





மெல்லிய புடவையும் ,
உடையும் பூவுமாய்,
இவளை கடக்கும்
போதெலாம்
ஏனோ வீசும்
கருகும் ரோஜா வாசம்...

உதட்டோரச் சாயமாய்
உவர்த்து வழிகிறது
கலியுக ராமர்களுக்கான
காமம் !

பசிக்கு போர்த்தியிருந்த
ஈரத் துணியையும்
அவிழ்த்தெறிந்து
எள்ளி நகைக்கிறது
வாழ்க்கை...

இதோ இங்கே
சில மேல்வயிறுகள்
நிரப்ப தன்
அடிவயிற்றை
அடகு வைக்கிறாள் ...

அம்மணமாய்
கிடக்கும் போதும்
அம் மனம்
நினைப்பது யாவும்
நொண்டிக் கணவனும்,
சவலைக் குழந்தையும்
பற்றித் தான் ...

உடல் தேவையும்,
உள்ளத் தேவையும்
உறவாட..

பொய்யாய் சிரிக்கிறாள்,
பொய்யாய் அணைக்கிறாள்,
பொய்யாய் உச்சமடைகிறாள் ..

எவனோ ஒருவனுக்கு
தற்காலிகமாய்
இரையாகிறாள் ...

தெய்வத்தாலும் ஆகாது
இவள் வாழ்வின்
துயர் துடைக்க,
உண்மையில்
'மெய்' வருத்தி
கூலி பெறுபவள்
இவள் மட்டுமே...

வயிற்றிலிருக்கும்
குழந்தைக்கு அங்கே
தான் காதல்கொண்ட
கதைகள் சொல்லி
மனைவி வளர்க்க ,

அவள்தன் காதலை,
காமமாய்
சுருங்கிய சிறு பையில்
இவள் கட்டிலுக்கடியில் ,
விட்டுச் செல்கிறது
ஒரு மிருகம் ...

முதுகின்
நகக் கீறல்களோ ,
மார்பில் பதிந்த
பற்தடங்களோ ,
இவளை பாதிக்கவில்லை ...

பழைய ரூபாய் நோட்டின்
வாசம் முகர்ந்து சற்றே
கண் மூடுகிறாள் ...

முன்னேற்றி முடி
காற்றிலாட,
ஆழ்ந்து தூங்குகிறது
அக்குழந்தை ....!!



புறம் பேசும்,
இவ்வுலகில்
எவர் பற்றியும்
எனக்கும்
கவலையில்லை ...

கண்டவனின்
பரவசத்திலும்
கண் மூடி ,
கணவனையோ,
காதலனையோ ,
நினைக்கும் ,
எந்தவொரு
விலைமகளும்
கண்ணகி தான் !!!



உரையாடல் போட்டிக்காக

போட்டியில் பங்கேற்கும் மற்ற கவிதைகள்


Flickr Link

Wednesday, September 30, 2009

கைப்பிடி பாசம் ..

Monday, September 28, 2009

முரண்




காதை பிடித்து
தூக்கினாலோ ,
கழுத்தை பிடித்து
திருகினாலோ ,
அது குழந்தையென
தெரிந்து ,
அமைதி காக்கிறது
குட்டி பூனையோ,
நாயோ !!!

சற்று முன்
கண்ணயர்ந்த
அன்னையோ ,
சற்றே தள்ளிவிட்டு ,
ஏதோ முணுமுணுக்கிறாள் !!

ஏதும் புரியாமல்
மெதுவாக
அழத் தொடங்குகிறது
அச்சிறு குழந்தை !!